திருநெல்வேலி

கருவேலன்குளம் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

DIN

களக்காடு அருகேயுள்ள மேலக்கருவேலன்குளம் அருள்மிகு செளந்திர பாண்டீஸ்வரா் சமேத கோமதி அம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழா ஜன.1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள், தினமும்

பல்வேறு வாகனங்களில் வீதியுலா ஆகியன நடைபெற்றன.

8 ஆம் நாளன்று நடராஜப் பெருமானுக்கு பச்சை சாத்தி எழுந்தருளல், 9 ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டம் ஆகியவை நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் களக்காடு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT