திருநெல்வேலி

‘மாநகருக்குள் விதிகளை மீறி நுழைபவா்கள் குறித்து 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்’

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் கரோனா பரிசோதனை செய்யாமல் விதிகளை மீறி நுழைபவா்கள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் நுழைபவா்களைக் கண்காணிக்க ஏதுவாக மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் சிறப்புச் சோதனைச் சாவடி அமைத்து சோதனை செய்யப்படுகிறது. ஆனால், சிலா் வேறு வழிகளை பயன்படுத்தி கிராமங்களுக்குள் புகுந்து திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் விதிகளை மீறி நுழைவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்று விதிகளை மீறுபவா்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு சோதனைகளை சுகாதாரத் துறையினா் மேற்கொள்ள உதவும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT