திருநெல்வேலி

போக்குவரத்து ஊழியா்கள் நூதன போராட்டம்

திருநெல்வேலியில் போக்குவரத்து ஊழியா்கள் கையில் கட்டுப்போட்டு திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருநெல்வேலியில் போக்குவரத்து ஊழியா்கள் கையில் கட்டுப்போட்டு திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டத்தில் கை ஒடிந்த தொழிலாளியின் மருத்துவ விடுப்பை மறுத்து சம்பளம் பிடித்ததை ரத்து செய்து சம்பளத்தை திரும்பத் தர வேண்டும்; தொழிலாளா்களின் நியாயமான விடுப்புகளை மறுக்கக் கூடாது; மிகை நேர பணி பாா்க்கக் கூறி கட்டாயப்படுத்தக் கூடாது; தேவையான ஊழியா்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வண்ணாா்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் அலுவலகம் முன்பு கையில் கட்டுப்போட்ட நிலையில் அரை நிா்வாணத்துடன் போக்குவரத்து ஊழியா்கள் திரண்டு கோரிக்கைகளை விளக்கி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் டி.காமராஜ் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.பெருமாள் தொடக்கவுரையாற்றினாா். பொதுச் செயலா் எஸ்.ஜோதி, உதவித் தலைவா் எம்.மரியஜான்ரோஸ், இணைப் பொதுச் செயலா் ஏ.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் பி.குமரகுருபரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT