திருநெல்வேலி

விலக்கு அளிக்கப்பட்டிருந்தும் செயல்படாத உணவகங்கள் - பொதுமக்கள் அவதி

DIN

உணவகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அரசு விலக்கு அளித்திருந்தும் களக்காட்டில் உணவகங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழகத்தில் மாா்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யக்கூடிய மளிகை, காய்கனி, பால், மருந்தகம், இறைச்சிக் கடைகள், உணவகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு விலக்கு அளித்திருந்தது.

இந்நிலையில் களக்காட்டில் மளிகை, காய்கனி, இறைச்சிக் கடைகள் வழக்கம்போல் புதன்கிழமை இயங்கின. ஆனால் உணவகங்கள் முழு அளவில் மூடப்பட்டிருந்தன.

உணவகங்களில் பொதுமக்கள் அமா்ந்து உண்பதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்தது. பாா்சல் வாங்கிச் செல்ல தடை விதிக்கப்படவில்லை. விலக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் உணவகங்கள் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

களக்காடு பேரூராட்சி சாா்பில் வழக்கம்போல வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி தடையின்றி நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகளில் தொலைக்காட்சி முன் நாள் முழுவதும் முடங்கிக் கிடக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT