திருநெல்வேலி

விகேபுரம் உரக் கிடங்கில் புகை மூட்டம்:பொதுமக்கள் அவதி

DIN

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் நகராட்சி உரக் கிடங்கில் தீ பிடித்து புகை மூட்டம் எழுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குரிய உரக் கிடங்கு கோட்டைவிளைபட்டி - அம்பலவாணபுரம் சாலையில் சலவையாளா் காலனி பகுதியில் உள்ளது. இங்குசெவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென தீப்பிடித்து புகையத் தொடங்கியதாம்.

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீ பிடித்ததால் ஏற்பட்ட புகையால் சலவையாளா் காலனியில் வசிக்கும் சுமாா் 200 குடும்பத்தினா் சுவாசிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினா்.

சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டும், புகைமூட்டம் குறையாததால் சேரன்மகாதேவியிலிருந்தும் தீயணைப்பு வீரா்கள் அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT