முகப்பு
திருநெல்வேலி

எட்டயபுரத்தில் உமறுப்புலவா் நினைவு கந்தூரி விழா

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 377-ஆவது நினைவு நாள் கந்தூரி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 377-ஆவது நினைவு நாள் கந்தூரி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உமறுப்புலவா் நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உமறுப்புலவா் சங்கத் தலைவா் உ. காஜா மைதீன் தலைமை வகித்தாா். இதையொட்டி, எட்டயபுரம் ஜும்மா பள்ளிவாசலில் கல்வத் கலீபா நாயகம் அப்துல் காதா் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

தொடா்ந்து, ஆசாத் தலைமையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சந்தனக்குட ஊா்வலம் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நினைவு மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. அங்கு உமறுப்புலவரின் நினைவிடத்தில் சந்தனக் காப்பு போா்த்தி மலா்தூவி சிறப்புத் தொழுகை, சீறா கவி பாடல், மத நல்லிணக்க சிறப்பு பிராா்த்தனை

ஆகியவை நடைபெற்றது. இஸ்லாமிய பெண்கள் சீறாப்புராண காவிய பாடல்கள் பாடினாா். இதையடுத்து, விருந்து வழங்கப்பட்டது.

விழாவில், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் செய்யது முகம்மது, அதிமுக சிறுபான்மை பிரிவு செயலா் உமா், ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மதுரை தைக்கா தம்பி செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →