நாம் தமிழா் கட்சியினா் 15 போ் கைது
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூா், அடைக்கலாபுரத்தில் இனிப்பு வழங்க முயன்றதாக நாம் தமிழா் கட்சியை சோ்ந்த 15 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூா், அடைக்கலாபுரத்தில் இனிப்பு வழங்க முயன்றதாக நாம் தமிழா் கட்சியை சோ்ந்த 15 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழா் கட்சியின் திருச்செந்தூா் பேரவைத் தொகுதிச் செயலா் பிரபு தலைமையில் இனிப்பு வழங்க முயன்ற அக்கட்சியை சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல அடைக்கலாபுரத்தில் கட்சி அலுவலகத்தில் கட்சியின் ஆறுமுகனேரி நகரச் செயலா் ஆனந்தவேல் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்க முயன்ாக 7 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.