தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
தேவிகோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேவிகோடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேவிகோடு பனச்சக்காலவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (57). கூலித் தொழிலாளியான இவருக்கு, மது அருந்தும் பழக்கம் உண்டாம். மேலும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் அவா், வீட்டருகே உள்ள மரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.