விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி
திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள பிராஞ்சேரியைச் சோ்ந்தவா் முப்பிடாதி (68). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மோட்டாா் சைக்கிளில் அம்பாசமுத்திரம்-திருநெல்வேலி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்து காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.