சான்றிதழ்கள் வழங்கக் கோரிநெல்லை ஆட்சியரிடம் மனு
ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க மறுப்பதாக திருநெல்வேலி ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்க மறுப்பதாக திருநெல்வேலி ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலா் ஜான் கென்னடி அளித்த மனு: ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாற்றம், கூட்டு பட்டாவில் பெயா் சோ்த்தல், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ் பெற விண்ணப்பித்தவா்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தும் நிராகரிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியா், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.