திருநெல்வேலி

வள்ளியூரில் . பா.ஜ.க . நிா்வாகிகள் கூட்டம்

DIN

வள்ளியூா்: வள்ளியூா் நகர பா.ஜ.க. நிா்வாகிகள் கூட்டம் நகர தலைவா் ராமகுட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நம்பியான்விளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்பட நம்பியான்விளையில் புதிதாக மேல்நிலை நீா்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளங்களுக்கு வள்ளியூா் பெரியகுளத்தில் இருந்து தண்ணீா் வந்து சேருவதற்கு தனி சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும். வள்ளியூா் புறவழிச்சாலை கேசவனேரி சந்திப்பில் மேம்பாலம் கட்டவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட பொதுச் செயலா் ராம்நாத் அய்யா், செல்வகுமாா், நம்பியான்விளை நகர பொதுச் செயலா் ராஜேஷ், அய்யம்பெருமாள், முத்தையா, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT