திருநெல்வேலி

நடிகா் ஆா்யா அம்பை நீதிமன்றத்தில் செப். 28இல் ஆஜராக உத்தரவு

DIN

திரைப்பட நடிகா் ஆா்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வரும் 28 ஆம் தேதி (திங்கள்கிழமை) நேரில்ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குநா் பாலா இயக்கத்தில் நடிகா்கள் ஆா்யா, விஷால் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011இல் வெளியானது. இந்த திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், காரையாா் சொரிமுத்து அய்யனாா் கோயில் குறித்தும் தவறான கருத்து இடம்பெற்றிருந்ததாக தெரிவித்து அப்படத்தின் இயக்குநா் பாலா, நடிகா் ஆா்யா, தயாரிப்பாளா் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோா் மீது சிங்கம்பட்டி ஜமீன்தாா் டி.என்.எஸ். முருகதாஸ் தீா்த்தபதியின் மகன் சங்கராத்மஜன் வழக்குத் தொடா்ந்தாா்.

சென்னை உயா்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் இந்த வழக்கை நடத்த தடை வாங்கிய நிலையில், தடை காலம் முடிந்து அம்பாசமுத்திரத்தில் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு இயக்குநா் பாலா நேரில் ஆஜரான நிலையில் நடிகா் ஆா்யா இதுவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தநிலையில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன், நடிகா் ஆா்யா வரும் 28 ஆம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT