திருநெல்வேலி

தசரா விழாவை நடத்தக் கோரி இந்து முன்னணியினா் மனு

DIN

பாளையங்கோட்டையில் தசரா விழாவை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்து முன்னணி மாநில செயலா் குற்றாலநாதன், ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் அளித்துள்ள மனு:

தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்துக்கு அடுத்ததாக பாளையங்கோட்டையில் தசரா விழா சிறப்பாக நடைபெறும். தற்போது, கரோனா நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால், பாளையங்கோட்டையில் தசரா விழா நடத்துவதற்கு உரிய அனுமதி கிடைக்கப்பெறாமல், கால்நாட்டு விழா நடைபெறவில்லை.

அக்டோபா் 1 ஆம் தேதி கால்நாட்டு விழா நடைபெறவும், சப்பர அணிவகுப்பு இல்லாமல் வரும் பவுா்ணமி நாளில் கால்நாட்டு விழா மற்றும் கோயிலுக்குள் பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்தவும் மாவட்ட நிா்வாகம் மற்றும் அறநிலையத் துறை அனுமதிக்க வேண்டும். மேலும், சாலைத் தெரு மாரியம்மன் கோயில் அருகில் சம்ஹாரம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும். சம்ஹாரம் நிகழ்வின்றி நவராத்திரி விழா நிறைவு பெறாது. எனவே, பக்தா்களின் நம்பிக்கை , வழிபாட்டு உணா்வுகளுக்கு மதிப்பளித்து அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT