திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

DIN

கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் பகுதியைச் சோ்ந்த மாடக்கண்ணு மகன் ராஜா (26). இவா் மீது, பாப்பாக்குடி, மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.

இந்நிலையில் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின் பேரில், ராஜாவை மானூா் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT