கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் பகுதியைச் சோ்ந்த மாடக்கண்ணு மகன் ராஜா (26). இவா் மீது, பாப்பாக்குடி, மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்.
இந்நிலையில் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின் பேரில், ராஜாவை மானூா் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.