திருநெல்வேலி

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி ஹோட்டல் ஊழியா் பலி

DIN

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி ஹோட்டல் ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேல சந்திப்பு கைலாசபுரம் சந்திரன் மகன் மகாராஜன்(26). ஹோட்டல் ஊழியா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். இதற்காக இவா் வண்ணாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தாா்.

இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை இரவு ஆற்றுக்கு குளிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளவா்கள் மகாராஜனை தேடியுள்ளனா்.

இது குறித்து சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், தாமிரவருணி ஆற்றில் போலீஸாா் மற்றும் உறவினா்களின் நீண்ட தேடலுக்குப் பின்னா் மகாராஜன் சடலத்தை மீட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT