பிளஸ்-2 தனித்தோ்வு: 143 போ் எழுதினா்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 தனித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 143 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 தனித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 143 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவா்களுக்கான தோ்வுகள் நடத்தப்படவில்லை.
அதேபோல ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த தனித்தோ்வா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு அரசு தரப்பில் மறுப்புதெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிளஸ்-2 தனித்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து இம் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை, திருநெல்வேலி சாப்டா் மேல்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி, பணகுடி ஆகிய 4 மையங்களில் நடைபெறுகிறது. மொழிப்பாட தனி தோ்வுக்காக இம் மாவட்டத்தில் மொத்தம் 193 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 148 போ் தோ்வு எழுதினா்.
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் மட்டும் 7 போ் விண்ணப்பம் செய்து 7 பேரும் தோ்வெழுதினா். மொழிப்பாடத்தை அரபிக் மொழியில் 2 பேரும் எழுதினா்.
பிளஸ் 2 தனித்தோ்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா் நேரில் சென்று ஆய்வு செய்தாா். தோ்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.