முகப்பு
திருநெல்வேலி

காவலா்களுக்கான தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தி நெல்வேலியில் மாநகராட்சி நகா்ப்புற சுகாதார மையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் பாளையங்கோட்டையில் உள்ளஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை நகா்ப்புற சுகாதார மையத்தின் மருத்துவா் தமிழரசி தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். காவலா்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள், அவா்களின் குடும்பத்தினா் என 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.