மேலப்பாளையத்தில் ஆா்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் ஆயுள்சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலப்பாளையத்தில் ஆயுள்சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சாா்பில் மேலப்பாளையம் சந்தை பகுதியில் நடைபெற்ற
ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ஆரிப் தலைமை வகித்தாா். இதில், ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எஸ்டிபிஐ கட்சி மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், பாப்புலா் ஃப்ரண்ட் அமைப்பின் மாவட்டச் செயலா் இம்ரான் அலி, இனப் படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பு அ. பீட்டா், எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி செயலா் பாளைசிந்தா உள்பட பலா் பங்கேற்றனா்.