திருநெல்வேலி

டீ கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு வழக்கு: ஒருவா் கைது

DIN

திருநெல்வேலி நகரம் பகுதியில் டீ கடைக்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கு தொடா்பாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் வயல் தெரு பகுதியைச் சோ்ந்தவா் இந்திராமுருகன் (62). டீ கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் நகரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை மா்ம நபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியனை (65) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT