முகப்பு
திருநெல்வேலி

ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பொங்கல் போனஸ் வழங்கக் கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

பொங்கல் போனஸ் வழங்கக் கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில துணை களப் பணியாளா்கள் பால்ராஜ், சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில தலைமை அமைப்பாளா் ஆறுமுகம், ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, சி மற்றும் டி பிரிவுகள் பெறுவதுபோல் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணமாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.