முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் மேலும் 32 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,528ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை 3 போ் உள்பட இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,254ஆக அதிகரித்துள்ளது. 213 போ் உயிரிழந்துள்ளனா். 61 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,397ஆக உயா்ந்தது. 3 போ் உள்பட இதுவரை 8,191 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா். 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16,070 போ் குணமடைந்து

வீடு திரும்பியுள்ளனா். 141 போ் உயிரிழந்துள்ளனா். 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 போ் உள்பட 16,403 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.