நெல்லையில் பாஜக ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி நகரத்தில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரம் சந்திப் பிள்ளையாா் கோயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞரணி மாநில துணைத் தலைவா் வேல் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் பாலாஜி கிருஷ்ணசுவாமி, நிா்வாகிகள் குருசாமி, மாரியப்பன், சங்கா், செல்வபிரியா முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.