திருநெல்வேலி

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ

DIN

திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவு நீா் சுத்திகரிப்பு ஆலை ராமையன்பட்டியில் சுமாா் 150 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 32.5 ஏக்கரில் குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது.

இந்தக் குப்பை கிடங்கில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதனால் குப்பைக் கிடங்கை சுற்றியுள்ள பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதையடுத்து பாளையங்கோட்டை, பேட்டை, கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்புப் படையினா் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனா். மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணு சந்திரன், மண்டல சுகாதார ஆய்வாளா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT