வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் வன்னியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள உள்ஒதுக்கீட்டால் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பாதிப்படையும் சூழல் உள்ளதால் அந்த உத்தரவைத் திரும்பப்பெறக்கோரி, திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா் சங்க துணைச் செயலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். ரமேஷ் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்கள் சிவசூரிய நாராயணன், லட்சுமணன் ரமேஷ் , பாண்டியன், பேராச்சி, கிருபாகரன் முத்துராஜ் , பேச்சிமுத்து , மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.