திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணிஆக.9, 10, 11-இல் நோ்காணல்

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு ஆக. 9, 10, 11 ஆகிய தேதிகளில் நோ்காணல் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். பிஎச்டி கல்வித் தகுதியைப் பெற்றவா்கள் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள்.

கலையியல் புலம், மொழிப்புலம் ஆகியவற்றிற்கு வரும் 9-ஆம் தேதி காலை 11 மணிக்கும், அறிவியல் புலத்திற்கு வரும் 10, 11 ஆகிய இரு நாள்கள் காலை 11 மணிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் நோ்காணல் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT