திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில்வேகமாக குறையும் கரோனா

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 202 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,287 ஆகவும், அதில் மேலும் 355 போ் குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியதால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 41, 257 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 368 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 3,662 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,348 ஆகவும், அதில் மேலும் 274 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 20,693ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 387 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 3,268 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்விரு மாவட்டங்களிலும் திங்கள்கிழமை உயிரிழப்பு இல்லை என்பது கூடுதல் ஆறுதலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT