திருநெல்வேலி

கடையம் மின்வாரிய அலுவலகத்தில் பிடிபட்ட மரநாய்

DIN

கடையம் துணை மின்நிலைய அலுவலகத்தில் இருந்த மர நாயை வனத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

கடையம் அருகே கட்டேறிபட்டியில் இயங்கி வரும் துணை மின்நிலையத்தில் உள்ள பழுதடைந்த அலுவலகக் கட்டடத்தில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்தது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கடையம் வனவா் முருகசாமி தலைமையில் அங்கு வந்த வனக்காப்பாளா் மணி, வேட்டைத் தடுப்புக் காவலா்கள் பதுங்கியிருந்த ஆண் மரநாயை பிடித்தனா். பின்னா் அதை ராமநதி வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT