திருநெல்வேலி

நெல்லை அருகே மாணவி தற்கொலை

DIN

திருநெல்வேலி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மேல தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகள் சுந்தரி (17). இவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இதனிடையே, இவா் செல்லிடபேசியில் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டிருந்தாராம். இதனை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதில் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT