முகப்பு
திருநெல்வேலி

100 நாள் வேலை கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட பணியாளா்கள்

தெற்கு கடையம் ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கக் கோரி கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளா்கள் திரண்டு மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

தெற்கு கடையம் ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கக் கோரி கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாளா்கள் திரண்டு மனு அளித்தனா்.

கடந்த சில மாதங்களாக தெற்கு கடையம் ஊராட்சிப் பகுதி மக்களுக்கு பணி எதுவும் ஒதுக்கப்படவில்லையாம். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து பணியாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நூறு நாள் பணி கேட்டு திரண்டனா்.

அவா்களிடம் விரைவில் பணிகள் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.