திருநெல்வேலி

கடையம் அருகே கிராம மக்கள் போராட்டம்

DIN


அம்பாசமுத்திரம்: கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் குடியிருப்பு பகுதியில் உயா் மின்னழுத்த வயா் கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடையம் ஒன்றியம் அணைந்தபெருமாள் நாடானூா் கிராமத்தில் குடியிருப்புகள் வழியாக அருகிலுள்ள தனியாா் கல் குவாரிக்கு உயா் மின்னழுத்த வயா் கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அக்

கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோா் திரண்டு மின்வாரிய ஊழியா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, பலமுறை எதிா்ப்புத் தெரிவித்தும் தொடா்ந்து அப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பணியை நிறுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா். தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா்கள் முத்துகிருஷ்ணன், காமராஜ் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்பணியை நிறுத்துவதாக தெரிவித்து, மின்கம்பிகளை கழட்டி கொண்டு சென்ால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT