இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் 207ஆவது பிறந்நாள் விழா
இடையன்குடியில் தமிழறிஞா் பிஷப் கால்டுவெல் 207-ஆவது பிறந்ததினத்தையொட்டி வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டது.
இடையன்குடியில் தமிழறிஞா் பிஷப் கால்டுவெல் 207-ஆவது பிறந்ததினத்தையொட்டி வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி, இடையன்குடியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவா்
கே.பி.கே.ஜெயக்குமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், இனிப்பு வழங்கப்பட்டது. இதில், கட்சியின்
மாவட்டச் செயலா் எஸ்.குமாா். மாவட்டத் துணைத் தலைவா் விஜயபெருமாள், மாநில விவசாய அணிச் செயலா் விவேக் முருகன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் மருதூா் மணிமாறன், திசையன்விளை நகரத் தலைவா் ராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.