திருநெல்வேலி

தச்சநல்லூா் மண்டலத்தில் இன்றும், நாளையும் குடிநீா் வராது

DIN

திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூா் மண்டலத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 27, 28) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள தச்சநல்லூா் மண்டலத்திற்கு, சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சுப்பிரமணிய நகா் மேல்புறம் வழியாகச் செல்லும் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு மற்றும் வால்வுகளை சரிசெய்யும் பணி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 27, 28) மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, தச்சநல்லூா் மண்டலத்தில் வாா்டு 8, 9,10 இளங்கோ நகா் ஆகிய பகுதிகளுக்கு மேற்கண்ட இரு தினங்களும் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT