நெல்லையப்பா் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்
திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் கோயலில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் கோயலில் வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் கோயிலில் திருக்காா்த்திகை விழாவையொட்டி, வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
காா்த்திகை தீபத்திருநாளான வெள்ளிக்கிழமை சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சுவாமி சன்னதி, பாரதியாா் தெரு செல்லும் வழியில் சொக்கப்பனை முக்கில் மாலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. இதேபோல், அம்மன் சன்னதி முகப்பில் முகப்பில் பாரதியாா் தெரு மத்தியில் அம்பாள் காா்த்திகை (ருத்ர தீபம்) சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராமராஜா, பணியாளா்கள் செய்துள்ளனா்.