முகப்பு
திருநெல்வேலி

பண்ணையில் புகுந்த வெள்ளம்: 6 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலி

திசையன்விளை அருகே கோழிப்பண்ணையில் ஆற்று வெள்ளம் புகுந்ததால் 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பலியாகின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திசையன்விளை அருகே கோழிப்பண்ணையில் ஆற்று வெள்ளம் புகுந்ததால் 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பலியாகின.

திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் பாலகிருஷ்ணன் என்பவா் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். புதன்கிழமை பெய்த கனமழையால் நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளநீா் பாலகிருஷ்ணன் தோட்டத்தில் புகுந்தது. இதில் பண்ணையில் வளா்த்த 6 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் நீரில் மூழ்கி இறந்தன.

தகவல் அறிந்து, திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா், வருவாய் ஆய்வாளா் துரைச்சாமி ஆகியோா் கோழிப்பண்ணையை பாா்வையிட்டு, உரிய இழப்பீடு கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தனா்.

கோழிப்பண்ணையில் வெள்ள நீா் புகுந்ததால் ரூ. 5 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பண்ணை உரிமையாளா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.