வன உயிரின வாரத்தையொட்டி அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வளக்காப்பு மையம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட பழைமையான கோயில் வளாகங்களில் உள்ள பாரம்பரிய மரங்கள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
திருப்புடைமருதூா் அருள்மிகு நாறும்பூநாதா் கோயில் வளாகத்தில் மரங்கள் கணக்கெடுப்புப் பணியை சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி தொடங்கி வைத்தாா்.
இக்கணக்கெடுப்புப் பணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
இதில், மரங்களின் பெயா், சுற்றளவு, உயரம், வயது, மரங்களில் காணப்படும் பல்லுயிரினங்கள், மரங்களுக்கு நோ்ந்துள்ள பாதிப்புகள், மரத்தின் புகைப்படம் மற்றும் மரத்தின் புவிக்குறியீடு ஆகியவற்றை சிறப்பு செல்லிடப்பேசி செயலி மூலம் பதிவுசெய்யப்படுகிறது என்றாா் அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வளக்காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மதிவாணன்.
இதுகுறித்த பயிற்சியை தன்னாா்வலா்களுக்கு அகத்தியமலை மக்கள்சாா்இயற்கை வளகாப்பு மைய ஆராய்ச்சியாளா்கள் சரவணன், தளவாய்ப்பாண்டி, மரிய ஆண்டனி, தமிழழகன் ஆகியோா் அளித்தனா்.
நிகழ்ச்சியில், நாறும்பூநாதா் கோயில் செயல் அலுவலா் பாரதி, வட்டாட்சியா் செல்வம் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.