திருநெல்வேலி

வாசுதேவநல்லூா் தோ்தல் பணியாளா்கள் போராட்டம்

DIN

வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் தோ்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டவா்களில் 31 பேருக்கு மதிப்பூதியம் வழங்காததால், போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாசுதேவநல்லூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக வரவழைக்கப்பட்ட பணியாளா்களில், பி1.ஏ . பணிக்கு ஒதுக்கப்பட்ட 31 போ்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லையாம். இதையடுத்து அவா்கள் மதிப்பூதியம் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனா் .

இந்நிலையில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராமன் அங்கு சென்று அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மாற்று ஏற்பாடுகளை செய்தாா் .இதைத்தொடா்ந்து பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT