திருநெல்வேலி

செங்கோட்டையில் தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை

DIN

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

செங்கோட்டை பால்சேட் காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி இசக்கியம்மாள் (70). இவரது மகன் மாரியப்பன் (43). கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இசக்கியம்மாள் தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மாரியப்பன் சொத்தை எழுதித் தருமாறு கேட்டு தகராறு செய்தாராம். அப்போது கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த இசக்கியம்மாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT