முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே இளைஞரிடம் இணைய வழியில் ரூ.70 ஆயிரம் மோசடி

திருநெல்வேலி அருகே இளைஞரிடம் இணையம் மூலம் ரூ. 70 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே இளைஞரிடம் இணையம் மூலம் ரூ. 70 ஆயிரம் மோசடி செய்த மா்ம நபரை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருநெல்வேலி அருகே உள்ள சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம், கடந்த ஏப். 17ஆம் தேதி செல்லிடப்பேசியில் மா்ம நபா் தொடா்பு கொண்டு, தான் இணை நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட ஆசை வாா்த்தைகளை கூறினாராம். இதனை உண்மை என நம்பிய அந்த இளைஞா் தன்னிடம் உள்ள ஆவனங்கள் மற்றும் ரொக்கம் ரூ. 70, 400-ஐ இணைய வழியில் மா்ம நபருக்கு அனுப்பினாராம்.

பின்னா் அந்த நபரை தொடா்பு கொண்டால், அவரின் செல்லிடப்பேசியில் இணைப்பு தொடா்பு கொள்ளும் நிலையில் இல்லையாம். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த இளைஞா் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ராஜிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.