திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ போராட்டம்

DIN

திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல்-டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் சாலை மறியல் நடைபெற்றது.

மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கனி, மாவட்டச் செயலா் பா்கிட் அலாவுதீன், பொருளாளா் ஆரிப் பாட்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் காதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம், எஸ்டிபிஐ கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT