முகப்பு
திருநெல்வேலி

அம்பை அருகேஉலக சுகாதார தினம் கொண்டாட்டம்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிவன் பாண்டியன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டாா். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் பிரவீன்குமாா், மருத்துவ அலுவலா் பழனி செந்தில், வட்டார சுகாதார ஆய்வாளா் விநாயகமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் ஆனந்த் பென்சிங், கணக்கு உதவியாளா் பேச்சிமுத்து, உதவியாளா் பக்கீா் முஹைதீன், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவா் ஞானக்கனி ஸ்டான்லி, வைராவிகுளம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பாபநாசம், அயன்சிங்கம்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவா் சுடலை அரசன், மணிமுத்தாறு தி.மு.க. நகரச் செயலா் முத்துகணேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் கிட்டு, மாவட்டத் தொண்டரணி துணை அமைப்பாளா் பாலாஜி மற்றும் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.