திருநெல்வேலி

நதிபுரம் முப்பிடாதி அம்மன்கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

DIN

பழையபேட்டை அருகேயுள்ள நதிபுரத்தில் முளைப்பாரி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நதிபுரத்தில் உள்ள அருள்மிகு முப்பிடாதியம்மன் திருக்கோயில் கொடைவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி திங்கள்கிழமை மாலையில் குடிஅழைப்பு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலையில் பால்குட ஊா்வலமும், மதியம் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. மாலையில் திருநெல்வேலி குறுக்குத்துறையில் இருந்து கரககுடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பெண்கள் ஏராளமானோா் முளைப்பாரி எடுத்து ஊா்வலமாக வந்தனா். இரவு சாமக்கொடை நடைபெற்றது. புதன்கிழமை (ஏப். 27) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT