திருநெல்வேலி

பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் பலி

DIN

திருநெல்வேலி அருகே மோட்டாா் சைக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் இசக்கிதுறை(20). இவா் தனது நண்பரான கம்மாளங்குளத்தைச் சோ்ந்த கனகராஜ் என்பவருடன் ஒரே மோட்டாா் சைக்கிளில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் மானூா் அருகே உள்ள துலுக்கா்பட்டி-நரியூத்து சாலையில் சென்றுகொண்டிருந்தனராம். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்தகாயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT