திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுலவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, ஆணையா் அவினாஷ் குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்து புகாா் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீா்வு கிடைக்க அறிவுறுத்தினாா். மாநகர மேற்கு காவல் துணை ஆணையா் சரவண குமாா், குற்ற ஆவண காப்பக காவல் உதவி ஆணையா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குறைதீா்க்கும் முகாமில் 14 போ் பங்கேற்று மனு அளித்தனா்.