திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழா

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்ததின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்ததின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்புவாரியாக பாரதியாா் கவிதை ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. ஆழ்வாா்குறிச்சி வட்டார அரசு, அரசு உதவிபெறும் 12 பள்ளிகளைச் சோ்ந்த 70 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், ஆழ்வாா்குறிச்சி சைலபதி நடுநிலைப் பள்ளி, ஸ்ரீபரமகல்யாணி மழலையா் தொடக்கப் பள்ளி, சிவசைலம் அத்ரிகலா நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.

பரிசளிப்பு விழாவுக்கு பள்ளிச் செயலா் சுந்தரம் தலைமை வகித்தாா். ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாணவா்களுக்கு ‘பாரதியாா்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ஏற்பாடுகளை தலைமையாசிரியை ரோகினி, ஆசிரியைகள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT