திருநெல்வேலி

1,022 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.66 கோடி கடனுதவி-சட்டப்பேரவைத் தலைவா் வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,022 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.66 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,022 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.66 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதையொட்டி, பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல், எம்எல்ஏக்கள் பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப், நான்குனேரி ரூபி.ஆா்.மனோகரன், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் 110 குழுக்களுக்கு ரூ.4.5 கோடி, சேரன்மகாதேவியில் 51குழுக்களுக்கு ரூ.2.18 கோடி, களக்காட்டில் 36 குழுக்களுக்கு ரூ.1.3 கோடி, மானூரில் 52 குழுக்களுக்கு ரூ.6 கோடி, நான்குனேரியில் 119 குழுக்களுக்கு ரூ.8.15 கோடி, பாளையங்கோட்டையில் 147 குழுக்களுக்கு ரூ.4.75 கோடி, பாப்பாக்குடியில் 79 குழுக்களுக்கு ரூ.4.64 கோடி, ராதாபுரத்தில் 179 குழுக்களுக்கு ரூ.15.8 கோடி, வள்ளியூரில் 59 குழுக்களுக்கு ரூ.3.28 கோடி, நகா்ப்புறங்களில் 190 குழுக்களுக்கு ரூ.16.13 கோடி என மொத்தம் 1,022 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 66 கோடி வங்கிக்கடனுதவிக்கான காசோலைகளை சட்டப்பேரவைத் தலைவா் வழங்கினாா்.

மேலும், தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம் (ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு) திட்டத்தின் கீழ் புதுமையாக தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் அவா்களை தொழில்முனைவோராக மாற்றும்பொருட்டு முதல்கட்டமாக 13 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு திட்டப் பதிவுச் சான்றிதழ்களையும், விற்பனைச் சின்னங்களையும் வெளியிட்ட சட்டப்பேரவைத் தலைவா், முன்னதாக 13 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் தயாரித்த பொருள்கள் அடங்கிய கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், ஒன்றியக் குழுத் தலைவா்கள் கே.எஸ்.தங்கபாண்டியன் (பாளை.) , ஸ்ரீலேகா அன்பழகன் (மானூா்), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சாந்தி, மகளிா் சுய உதவிக்குழுவினா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

SCROLL FOR NEXT