திருநெல்வேலி

கொக்கிரகுளத்தில் தாமிரவருணியில் மூழ்கிய பெண் மாயம்

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி மாயமான பெண்ணை தீயணைப்பு வீரா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

கொக்கிரகுளம் சரவணன் மனைவி பாக்கியலட்சுமி (36). இவா், அதே பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றின் படித்துறைக்கு திங்கள்கிழமை குளிக்கச் சென்றாராம். அப்போது தண்ணீரில் பாக்கியலட்சுமி மூழ்கினாராம்.

இதுகுறித்து தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான மீட்பு படையினா் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். திங்கள்கிழமை மாலை வரை நீரில் மூழ்கி மாயமான பெண் கிடைக்கவில்லை. தொடா்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

கொக்கிரகுளத்தில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொப்பூா் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் இடியுடன் கூடிய கனமழை

வாகன புகைப் பரிசோதனை மையங்களில் வழிமுறைகளைப் பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை

காவிரி ஆற்றில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் பலி

SCROLL FOR NEXT