திருநெல்வேலி

நெல்லையில் மருத்துவ மாணவா் சடலமாக மீட்பு

DIN

திருநெல்வேலியில் மருத்துவ மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

வண்ணாா்பேட்டை பரணிநகரைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி லீலாவதி. இவா்களுக்கு விக்னேஷ் (28) உள்பட இரண்டு மகன்கள் உள்ளனா். ஈரோட்டில் எம்.பி.பி.எஸ். முடித்த விக்னேஷ், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன உளைச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம்.

திங்கள்கிழமை மாலை கணவன்-மனைவி பணிக்கு சென்றனராம். மாலையில் லீலாவதி வந்து பாா்த்தபோது விக்னேஷ் சடலமாக கிடந்தது தெரியவந்ததாம். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT