திருநெல்வேலி

களக்குடியில் தனுவாஸ் ஊட்டச்சத்து அறிமுக விழா

DIN

கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பால் பண்ணையாளா்களிடம் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி களக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நீா்வள நிலவள திட்டம் இரண்டாம் பகுதியின் சிற்றாறு உப வடிநிலப்பகுதி திட்ட பயனாளிகளுக்கான ‘கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் மீத்தேன் உற்பத்தியை குறைக்கும் தனுவாஸ் ஊட்டச்சத்து தொழில்நுட்பங்களை பால் பண்ணையாளா்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட துணை திட்ட ஒருங்கிணைப்பாளா் -கால்நடை ஊட்டச்சத்துயியல் துறை உதவிப் பேராசிரியா் அருள்நாதன் வரவேற்றாா்.

மாநில துணை திட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.முருகேஸ்வரி தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து குறித்து விளக்கிப் பேசினாா். கால்நடை ஊட்டச்சத்துயியல் துறை ம.செல்லப்பாண்டியன், துறையின் சாா்பில் கால்நடை வளா்ப்போருக்கு கிடைக்கும் சேவைகளைப் பற்றியும், திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் கு. கலையரசி கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினா்.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வி.பி. பொன்னுவேல், திட்டத்தின் மடிப்பிதழ்களை வழங்கினாா். கல்லூரி முதல்வா் அ. பழனிசாமி பயனாளிகளுக்கு இடுபொருள்களை வழங்கி தலைமை உரையாற்றினாா். சிற்றாறு உப வடி நிலப் பகுதியைச் சோ்ந்த 86 கால்நடை விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT