திருநெல்வேலி

பாளை. அருகே மண் கடத்தல்: ஒருவா் கைது

DIN

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி பகுதியில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியில் பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளா் நயினாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, அதில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை ஓட்டிவந்த ரெட்டியாா்பட்டிபகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் 3 யூனிட் செம்மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவைப் பயிரில் உயா் விளைச்சலுக்கான உழவியல் நுட்பங்கள்

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT