திருநெல்வேலி

நெல்லை கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லை அருள்மிகு கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள்  கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

DIN

நெல்லை: நெல்லை அருள்மிகு கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள்  கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கைலாசநாதசுவாமி கோயில். இத்திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் வைகாசி பெருந்திருவிழா மிகச்சிறப்பாகும். 

இந்தாண்டுக்கான  வைகாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டதும் சுவாமி, அம்பாளுக்கு  அபிஷேகம் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து யாகசாலையில்  பூஜைகள் நடைபெற்று கொடிப்பட்டம் வீதிஉலா வந்தது. தொடா்ந்து சுவாமி, அம்பாள், சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள கொடிமரத்திற்கு முன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஏழுந்தருளினா். கொடிக்கு  பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. 

அதனைத் தொடா்நது கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. கொடிமரத்திற்கு அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு தீபராதனை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் பக்தர்கள்  கலந்துக் கொண்டனர். 10 தினங்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் தினமும் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ம் தேதி  திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் பிப்ரவரி 5-இல் மின்தடை

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்; அமைச்சா் ஆறுதல்

மல்லகுண்டா பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: கிராம மக்கள் கோரிக்கை

வவுச்சா் ஊழியா்கள் தா்னா; போலீஸாருடன் வாக்குவாதம்

துணைவேந்தா்கள் நியமனம்: தேடல் குழு பதவிக் காலம் நீட்டிப்பு நடவடிக்கையை கைவிட ஆளுநா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT